Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Tuesday, 29 December 2020

ஆதியில் இருந்தவர் இயேசு!

அத்தியாயம் 2

(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)

ஆதியிலே வார்த்தை இருந்தது¸ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது¸ அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


        அவருக்குள் ஜீவன் இருந்தது¸ அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1:1-5)
        ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற வசனம் யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில் வருகிறது.  யோவான் சுவிசேஷம் எல்லா ஜனங்களும் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.  
        யோவான் என்ற சீஷன் இயேசுவை ஆதியில் பிதாவோடு (அகிலத்தையும் சிருஷ்டித் தவர்) இருந்தவராகக் கண்டார்.  ஆதி என்ற பதத்திற்கு ஆரம்பம் என்று பொருள். அது இந்த உலகம் தோன்றின காலகட்டத்தைக் குறிக்கிறது.  இந்த உலகம் தோன்றி சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

        இயேசு மனிதனாய் அவதரித்து ஈராயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது.  ஆனால் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்¸ தேவனா யிருந்தார். ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும்¸ அதிலுள்ள குடிகளையும் சிருஷ்டித்தபொழுது இயேசுவும் அங்கே இருந்தார்.  ஆம்¸  இயேசுவின் மூலமாய்த்தான் இந்த உலகமும்¸ அதிலுள்ள யாவும் உண்டாக்கப்பட்டது.
        ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும் சிருஷ்டித்தார்.  பூமியானது ஒழுங்கின்மையும்¸ வெறுமையுமாய் இருந்தது;  ஆழத்தின்மேல் இருள் இருந்தது...” (ஆதியாகமம் 1:1¸ 2).

        இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை ஆதாரமாகப் பயன்படுத்தினார் என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த இந்தப் பூமியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை உபயோகித்தார்.
        வார்த்தை என்பது ஒருவரது எண்ணம் மற்றும் சிந்தையின் வெளிப்பாடாகும். வார்த்தையின் மூலமாக நாம் நம்முடைய எண்ணங்கள்¸ திட்டங்கள்¸ கருத்துக்கள்¸ கட்டளைகள்¸ மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறோம். அதைப்போலவே காணக் கூடாத மிகப்பெரிய இறைவன் தன்னுடைய வல்லமையை¸ உருவாக்கும் சக்தியை¸ ஆற்றலை வெளிப்படுத்தத் தன்னுடைய வார்த்தையைப் பயன்படுத்தினார்.  அந்த வார்த்தைதான் இயேசு.

ஞானமாயிருந்த இயேசு!


        கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் (ஞானமாகிய இயேசு) தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.  பூமி உண்டாகுமுன்னும்¸ ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஆழங்களும்¸ ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.  

        மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்¸ குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்¸ அவர் பூமியையும் அதின் வெளிகளையும்¸ பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்கு முன்னும் நான் ஜநிப்பிக்கப் பட்டேன்.

        அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்¸ உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து¸ சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்துவைக்கையிலும்¸ சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு¸ பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்¸ நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்;
        நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியா யிருந்து¸ எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு¸ மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.”  (நீதிமொழிகள் 8:22 - 31)

        இந்த வசனங்களில் ஆண்டவராகிய இயேசுவை ஞானத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கிறது.  பிதாவாகிய தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு¸ அதை வடிவமைப்பதற்குத் தம்முடைய ஞானத்தைப் பயன்படுத்தினார். அந்த ஞானம்தான் இயேசு. ஆதியிலே – அதாவது சிருஷ்டிப்பின் நாளிலே இயேசு பிதாவோடுகூட அவருடைய ஞானமாக¸ வார்த்தையாக இருந்து சிருஷ்டிப்பிலே பங்கு பெற்றார்.  
        பிதா தம்மை வெளிப்படுத்த¸ தம்முடைய சிருஷ்டிப்பின் வேலையைச் செய்துமுடிக்க தன்னுடைய பிள்ளையாகிய இயேசுவை — ஞானமும்¸ வார்த்தையுமாய் இருந்த அவரைப் பயன்படுத்தினார்.

மானிடனான இயேசு!


        அந்த வார்த்தை மாம்சமாகி¸ கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வராய்¸ நமக்குள்ளே வாசம்பண்ணினார்;  அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14)

ஆதியிலே வார்த்தையாய்¸ ஞானமாய் இருந்த இயேசு¸ மாமிசத்தில் வெளிப்பட்டார் (மனிதனானார்). அதுதான் கிறிஸ்துமஸ்.  இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் என்பது பொருள். அதாவது மனிதனின் பாவங்களைப் போக்கி அவனைக் காப்பவர் என்பது அதின் அர்த்தம். இயேசு நம்மைப் பாவத்திலிருந்தும்¸ சாபத்திலிருந்தும்¸ வியாதியிலிருந்தும் விடுவித்துக் காக்கவே மனிதனாக அவதரித்தார்.

        அவரைக் குறித்து வேதம் இவ்வாறாகச் சொல்லுகிறது: “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.  அவர் உலகத்தில் இருந்தார்¸ உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று¸ உலகமோ அவரை அறியவில்லை.  அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்¸ அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

        அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ¸ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி¸ அவர்க ளுக்கு அதிகாரங்கொடுத்தார்.”  (யோவான் 1:9-12)

        ஆம்¸  இயேசு உலகத்திற்கு ஒளியா யிருக்கிறார்.  இருள் என்பது  இந்த  உலகத்தில்  காணப்படுகிற  பாவம்¸  சாபம்¸  அநியாயம்¸ அக்கிரமம் மற்றும் மனிதனைக் கெடுக்கக்கூடிய அத்தனை செயல்களையும் குறிக்கிறது.  இயேசுவை நம்பி அவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் வெளிச்சமாக இருக்கிறார்.  அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்¸ சாபங்களை மாற்றுகிறார்¸ வியாதி மற்றும் வேதனைகளை நீக்கிப்போடுகிறார்.

Monday, 28 December 2020

வேறே தேவர்கள்!

அன்றன்றுள்ள அப்பம்
(டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை 2020)

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" (யாத். 20:3).


கர்த்தரே உங்களுடைய தேவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் அவர்தான். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவர்தான். உங்கள்மேல் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறவரும் அவர்தான். அவர் அன்போடு உங்களைப் பார்த்து, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்கிறார்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர்மேல் கர்த்தர் மனதுருகினார். விக்கிரக வழிபாட்டிலிருந்து அவர்களை வேறுபடுத்தி, தம்முடைய சொந்த ஜனங்களாகத் தெரிந்து கொண்டு தன்னை வெளிப்படுத்தச் சித்தமானார். எகிப்தின் தெய்வங்கள் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தார். எகிப்தின் மந்திரவாதிகள் மேல் தண்டனையை செலுத்தினார். பார்வோனுடைய கையில் இருந்த இஸ்ரவேலரை அவர் விடுவித்தபோது, இஸ்ரவேலர் மேல் மனதுருகி அவர்களுக்கு நீதியும் நியாயமும் செய்யச் சித்தமானார்.

இஸ்ரவேலர் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளாக எகிப்தில் கொத்தடிமைகளாகப் பணி புரிந்தார்கள். அவர்களுக்கு மறுக்கப்பட்ட சம்பளத்தை ஈடு செய்யும்படி, அவர்கள் புறப்படும்போது எகிப்தியரிடமிருந்து தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த ஆடைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் எகிப்தியரை கொள்ளையிட கர்த்தர் அனுமதித்தார் (யாத். 12:36). இதன் நிமித்தம் இஸ்ரவேலரிடம் ஏராளமான தங்கம் இருந்தது.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு மீட்கப்பட்டு, கானானுக்குச் செல்லும் வழியில், சிவந்த சமுத்திரத்தைக் கடந்த இஸ்ரவேலர், விக்கிரக ஆராதனை என்னும் வலையில் விழுந்தார்கள். மோசே சீனா மலையில் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் தாங்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்த பொன்னணிகளை உருக்கி, பொற்கன்றுக்குட்டியை விக்கிரகமாகச் செய்து, அதை வணங்கத் துவங்கினார்கள். கர்த்தர் நன்மையாய் இருக்கும்படி கொடுத்த பொன்னைக் கொண்டு அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடுண்டாக்கிக் கொள்ளும்படி விக்கிரகங்களைச் செய்து விட்டார்கள் (யாத்.32:1-4).

நீங்கள் இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன், அனுபவிக்க அநேக மேன்மைகளைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவைகள் கர்த்தருடைய சட்ட திட்டத்தின் கீழிருக்கும் போது ஆசீர்வாதமாயிருக்கும். பொன்னை கர்த்தர் உண்டாக்கினார்; பணத்தையும் கர்த்தர்தான் உண்டாக்கினார். பணத்தை ஊழியத்திற்கு பயன்படுத்தலாம். பணத்தை செலவழித்து ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம். ஆனால் இந்த பொன்னும், பணமும் பொருளாசையாக மாறும்போது விக்கிரகங்களாக மாறிவிடுகின்றன. கிறிஸ்துவைவிட நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அவை விக்கிரகங்களாக மாறுகின்றன.

உங்களுக்கு உணவு அவசியம்! ஆனால் அதுவும் அளவுக்கு மீறும்போது விக்கிரகமாகி விடுகிறது. அதுவே உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையாய் அமைந்து விடுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுக்கு விக்கிரங்களை நீங்களே உண்டாக்கிக் கொள்ளாதேயுங்கள்.

நினைவிற்கு:- "பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக. ஆமென்" (1 யோவா. 5:21).

Thursday, 24 December 2020

அதிசயமானவர் இயேசு!

 அத்தியாயம் 1

(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)


“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;  கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;  அவர் நாமம் அதிசயமானவர்¸ ஆலோசனைக் கர்த்தா¸ வல்லமையுள்ள தேவன்¸ நித்திய பிதா¸ சமாதானப்பிரபு எனப்படும்.”  (ஏசாயா 9:6)

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்ற மனிதர்களின் பிறப்பைவிட பலவிதங்களில் வித்தியாசமானதாக இருந்தது.  ஏனென்றால் அவர் தேவ குமாரன்.  அவர் மாம்ச உருக்கொண்டு மனிதனாக அவதரித்ததினால் அவர் மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்பட்டார்.  

இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை கீழ்க்காணும் மூன்று காரியங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.  முதலாவதாக அவருடைய பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட ஒன்று.  இரண்டாவதாக அவருடைய பிறப்பு சரித்திரப்பூர்வமான ஒன்று.  மூன்றாவதாக¸ அவருடைய பிறப்பு அதிசயமானதும்¸ தெய்வீகத் தன்மையுள்ளதுமாயிருந்தது.

முன்னறிவிக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு:

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட (முன்னறிவிக்கப்பட்ட) ஒரு சம்பவம்.  இயேசு யூதா கோத்திரத்தில் (யூதர்கள் வம்சத்தில்) பிறப்பார் என்று கி.மு. 1689-ம் ஆண்டில் யாக்கோபு தீர்க்கதரிசனமாய்க் கூறியுள்ளார் (ஆதியாகமம் 49:10). 

இயேசு இஸ்ரவேல் தேசத்தில் ஒரு நட்சத்திரம் உதிப்பதுபோல உதிப்பார் என்று பிலேயாம் என்ற தீர்க்கதரிசி கி.மு. 1452-ம் ஆண்டில் அறிவித்திருக்கிறார் (எண்ணாகமம் 24:17).

இயேசு ஒரு தெய்வீகப் பிறவியாகக் கன்னிகையின் மூலம் பிறப்பார் என்றும்¸ தாவீது என்னும் அரசனின் சந்ததியில் பிறப்பார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசியினால் கி.மு. 713-ல் அறிவிக்கப்பட்டது (ஏசாயா 7:14¸ ஏசாயா 9:6¸7).  

இயேசு உலகின் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள யூதேயா தேசத்திலிலுள்ள “பெத்லகேம்” என்ற சிற்றூரில் பிறப்பார் என்று மீகா என்ற தீர்க்கதரிசி கி.மு. 710-ம் ஆண்டில் அறிவித்தார் (மீகா 5:2).

இந்த வேத வசனங்களையெல்லாம் நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு தற்செயலாக நடந்த சம்பவமன்று.  அது நம்மை உண்டாக்கிய தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒன்று.  ஆதியிலே திட்டம்பண்ணப்பட்ட ஒன்று.

ஆதியிலே தேவனோடுகூட சிருஷ்டிப்பிலே பங்கு பெற்ற இயேசு¸ பிதாவின் வார்த்தையை நிறைவேற்ற சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சமானார் (மனிதனானார்).  இயேசு இந்த உலகத்திற்கு வரும்படி தன்னை அர்ப்பணித்த பொழுது இவ்வாறாகக் கூறினார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்¸ என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.

அப்பொழுது நான்¸  இதோ¸ வருகிறேன்¸ புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே¸ உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;  உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.” (சங்கீதம் 40:6-8).  ஆகவே¸ இயேசுவினுடைய பிறப்பு தேவனுடைய முன்னறிவிப்பின்படியே நடைபெற்ற ஒன்றாகும்.

சரித்திரப்பூர்வமான இயேசுவின் பிறப்பு!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து உலக சரித்திரம் கி.மு. என்றும் கி.பி. என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  இயேசுவின் பிறப்பை அன்று உலகிற்கு வெளிப்படுத்த ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது.

கி.மு.5-க்கும்¸ கி.மு.2-க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்திய மாதங்களின் தொடக்கமாகிய மெசொரி மாதத்தில் அதிகாலையில் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வந்ததாக சரித்திர ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மெசொரி" என்ற வார்த்தைக்கு “ஒரு அசரகுமாரனின் பிறப்பு” என்று அர்த்தமாம்.  டயோனிசியஸ் எக்சிகஸ் என்பவர் உருவாக்கிய சரித்திர நாட்காட்டியை வைத்து கணக்கிட்ட வேதஆராய்ச்சியாளர்கள் கி.மு. 4-ல் இயேசு பிறந்ததாகக் கணக்கிடுகின்றனர். 

இயேசு பிறந்த காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திரிகள் யூதேயா தேசத்தில் ஒரு இராஜா பிறந்திருக்கிறார் என்று சொல்லி யூதேயா தேசத்திற்குச் சென்று அங்குள்ள இராஜாவின் அரண்மனையில் விசாரித்தனர்.  ஆனால் அங்கு அவரைக் காணாமல் அவரைத் தேடி விசாரித்து அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் பிறந்திருக்கிறார் என்று கண்டு அவரைப் பணிந்துகொண்டனர் (மத்தேயு 2:1-12).

அதிசயமான இயேசுவின் பிறப்பு!

இயேசுகிறிஸ்து அதிசயமானவர்.  அவர் பிறப்பு ஓர் அதிசயம்.  ஏனென்றால்¸ இந்த உலகத்தில் ஒரு மனிதனும் பிறக்காத விதத்தில் அவர் பிறந்தார்.  கன்னிகையின் வயிற்றில் உருவாகிப் பிறந்தார்.  இது ஓர் அதிசயம்.

பொதுவாக¸ இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு ஓர் பொற்றோர் அவசியம் (ஒரு ஆண் மற்றும் பெண்). இவர்கள் இருவருடைய மாம்சம் மற்றும் இரத்தத்திலிருந்து பிறப்பதுதான் ஒரு குழந்தை.  ஆனால்¸ இந்த உலகத்தில் ஒரே ஒரு குழந்தை மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  அதுதான் பாலகனாகிய இயேசுகிறிஸ்து!

ஒரு புருஷனை அறியாத கன்னிகையிடம் இயேசு பிறந்தது அவர் அதிசயமானவர் என்றும் தெய்வீகத்தன்மை உடையவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.  இயேசுவின் தாயாகிய மரியாளும் (மிரியாம்)¸ அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.  

யூதர்களுடைய வழக்கத்தின்படி நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும்¸ பெண்ணுக்கு மிடையே  மூன்று கட்டங்களாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது.  அவையாவன:  முதலாவது கடடமாக சிறுபிராயத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் செய்யப்படும் என்று பெற்றோர்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக¸ பிள்ளைகள் திருமண பருவத்தை அடையும்போது இருபாலரு டைய சம்மதத்தைக் கேட்டறிந்து ஒப்பந்தம் செய்துகொள்ளுவார்கள்.  

மூன்றாவது கட்டமாக¸ திருமணம் நடைபெறவிருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பாக சமுதாய மக்களின் முன்னிலையில் இரு வீட்டாரும் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.  நிச்சயிக்கப்பட்ட பெண் அந்த ஒரு வருடகால இடைவெளியில் தனது கன்னித்தன்மையைக் காத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை அவள் தன் தவறான நடக்கையினால் கர்ப்பவதியானால்¸ அந்த ஒருவருட இடைவெளியில் அது தெரியவரும் போது¸ யூத வேதச் சட்டப்படி நிச்சயிக்கப்பட்ட மணமகன் அவளோடு செய்த நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை நிச்சயித்துத் திருமணம் செய்து கொள்ள  உரிமையுண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மரியாள் கர்ப்பவதியானாள் என யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது.  ஆகவே யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாகத் தள்ளிவிட மனதாயிருந்தான்.  ஆனால் யோசேப்பு நீதிமானாயிருந்தபடியினால் அவன் மரியாளைத் தள்ளிவிடுவதைத் தேவன் விரும்பவில்லை.  ஆகவே¸ பிதாவாகிய தேவன் சொப்பனத்திலே ஒரு தேவதூதனை யோசேப்பினிடத்தில் அனுப்பி அவனுக்கு அறிவுரை கூறினார்: “…தாவீதின் குமாரனாகிய யோசேப்பே¸ உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப்  பெறுவாள்¸ அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்… 

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து¸ கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு¸ அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து¸ அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1: 20 – 25)


Sunday, 6 December 2020

அவபக்தியுள்ள காயீன்!

அத்தியாயம் 4

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)


“பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதர னைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்;  அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்?  தன் கிரியைகள் பொல்லாதவைகளும்¸ தன் சகோதரனுடைய கிரியைகள்     நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே.” (1 யோவான் 3:12)

“இவர்களுக்கு ஐயோ!  இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து¸ பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி¸ கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி¸ கெட்டுப்போனார்கள்.”  (யூதா 1:11)

காயீனைக் குறித்து வேதம் சொல்லுகிறது:

1. அவன் பொல்லாங்கனால் (சாத்தானால்) உண்டானவன்.  அதாவது காயீன்¸ ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மூத்தமகனாகத் தேவனால் கொடுக்கப்பட்டிருந்தாலும்¸ அவன் பொல்லாங்கனாகிய சாத்தானுக்கு இடங்கொடுத்து அவனுடைய பிள்ளையானான்.

2. அவன் கெட்ட வழியில் நடக்கிறவனாய்க் காணப்பட்டான்.  தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை அவன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் உண்டானது; அவன் முகநாடி வேறுபட்டது.

3. அவன் நன்மை செய்வதைக் காட்டிலும் தீமை செய்வதையே தெரிந்துகொண்டான். அவனுடைய கிரியைகள் (செய்கைகள்) பொல்லாதவைகளாய் இருந்தன.  இதினிமித் தம் அவன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்தான்.

ஆதாமின் முதல் தலைமுறையிலேயே துணிகரமான பாவமாகிய “கொலை” காணப்பட்டது. பாவத்தின்மேல் பாவத்தை மனிதன் செய்ய ஆரம்பித்து விட்டான்.  இதினிமித் தம் மனிதன் தேவனோடுள்ள ஐக்கியத்தை (உறவை) முற்றிலும் இழக்க நேர்ந்தது.  தேவ சமூகத்தை இழந்த காயீன் பக்தியற்ற ஒரு சந்ததியின் தகப்பனானான். பக்திமானும்¸ நீதிமானுமாகிய ஆபேலுடைய சந்ததி இவ்வுலகை விட்டு மறைந்தது.

காயீனின் வழிநடந்த லாமேக்கு!

“காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி¸ ஏனோக்கைப் பெற்றாள்;  அப்பொழுது அவன் (காயீன்) ஒரு பட்டணத்தைக் கட்டி¸ அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்;  மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்;  மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்;  ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்;  மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.” (ஆதியாகமம் 4:17¸18¸19)

“லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே¸ சில்லாளே¸ நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே¸ என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்;  எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்;  எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;”  (ஆதியாகமம் 4: 23)

ஆபேலைக் கொலைசெய்த காயீனுடைய சந்ததியிலே ஐந்தாம் தலைமுறையிலே பிறந்தவர் லாமேக்கு.  இந்த லாமேக்கு தன் முற்பிதாவாகிய காயீனுடைய வழியில் நடந்து தனக்குக் காயமுண்டாக்கின¸ தனக்குத் தழும்பு உண்டாக்கின ஒரு வாலிபனைக் கொலை செய்தான்.  அதைத் தன் மனைவிமார்களும் அறிந்திருக்கும்படி செய்தான்.

லாமேக்கு காயீனுடைய வழியில் நடந்தது மட்டுமல்ல¸ தேவன் நியமித்த நியமமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிரமாணத்தை மீறினான்.  முதன் முதலில் இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணி குடும்ப வாழ்வை நடத்தினவர் இந்த லாமேக்கு.  காயீனுடைய சந்ததியினர் எதிர்கால சந்ததிக்கு தவறான வழிமுறைகளை வித்திட்டுச் சென்றனர்.  

நாட்கள் செல்லச் செல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளோடு வாழ்வது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.  இன்றைக்கும் காயீன் மற்றும் லாமேக்குடைய வழியில் நடக்கிற அநேகர் நம் நடுவிலும் உண்டு.

கொலை செய்வது¸ விபச்சாரம் மற்றும் வேசித்தனம் செய்வது மாம்சத்தின் கிரியையாயிருக்கிறது.  கலாத்தியர் 5-ஆம் அதிகாரம்¸ 19 முதல் 21 வரை உள்ள வசனங்களில் வேதம் மாம்சத்தின் கிரியைகள் எவை எவை என்று வகையறுக்கிறது:

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன்  அவையாவன: விபசாரம்¸ வேசித்தனம்¸ அசுத்தம்¸ காமவிகாரம்¸ விக்கிரகாராதனை¸ பில்லிசூனியம்¸ பகைகள்¸ விரோதங்கள்¸ வைராக்கியங்கள்¸ கோபங்கள்¸ சண்டைகள்¸ பிரிவினைகள்¸ மார்க்கபேதங்கள்¸

பொறாமைகள்¸ கொலைகள்¸ வெறிகள்¸ களியாட்டுகள் முதலானவைகளே;  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகளில் ஏதாவது நம்மிடம் காணப்படுமானால்¸ நம்மால் தேவனுடைய ராஜ்யம் எனப்படுகிற பரலோகத்திற்குள் செல்லமுடியாது.  இப்படிப்பட்ட பாவங்களை விட்டு மனந்திரும்பி நாம் புதுசிருஷ்டியாய் மாறும்பொழுதுதான் பரலோக வாழ்வுக்குத் தகுதியுடையவர்களாகிறோம்.

காயீனின் சந்ததி அழிந்தது!

காயீன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்த பாவத்திலிருந்து மனந்திரும்பவில்லை.  மாறாக அவன் தனக்கென்றும் தன் சந்ததிக்கென்றும் ஒரு பட்டணத்தைக் கட்டிக் கொண்டு அதிலே வாழ்ந்து சுகமாயிருக்க விரும்பினான்.  ஆகவே¸ அவன் எத்தனை ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து மரித்தான் என்பதை வேதம் சுட்டிக் காட்டவில்லை.  

ஒருவேளை காயீனுடைய ஆத்துமாதான் மரித்து வேதனையுள்ள இடமாகிய பாதாளத்திற்குச் சென்ற முதல் ஆத்துமாவாக இருக்கலாம். மட்டுமல்ல¸ காயீனுடைய சந்ததி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்து மாண்டது.  ஆகவே¸ காயீன் மற்றும் லாமேக்கைப்போல வாழாமல் கர்த்தருக்குப் பயந்து அவர் கட்டளைகளின் வழிநடப்போம்.

காயீன் மற்றும் அவன் சந்ததியார் வாழ்ந்த காலம் மனச்சாட்சியின் காலம் எனப்படுகிறது.  அதாவது மனிதர் களின் மனச்சாட்சியில்¸ எது நல்லது எது கெட்டது என்ற அறிவைத் தந்து தேவன் அவர்களை நடத்தி வந்தார்.  மனச்சாட்சியின் மூலம் அவர்களோடு பேசினார்.  சிலவேளைகளில் நேரடியாகவும் பேசினார்.  

ஆனால்¸ அந்நாட்களில் வாழ்ந்த பக்தியற்ற மனுஷர்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கு மாறாக அவர்கள் துணிகரமாக வாழ்ந்தார்கள். தங்கள் மனதும் மாம்சமும் விரும்பினதைச் செய்து தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்.  ஆகவே தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோனார்கள்.

Friday, 27 November 2020

நன்மை¸ தீமை!

அத்தியாயம் 3

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)





“பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ¸ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து¸ புசித்து¸ என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று¸
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு¸ ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்¸ வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்” (ஆதியாகமம் 3: 22-24).

தேவன் மனிதனுக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைத்தார்: ஒன்று ஜீவன்¸ மற்றொன்று மரணம்.  இரண்டையும் கனிகளாய் மரங்களிலே அவனுக்கு முன்பாக வைத்தார்.  மேலும்¸ அவனுக்கு சுயமாய் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் கொடுத்திருந்தார். ஆனால்¸ மனிதன் தெரிந்து கொண்டது ஜீவனையல்ல் மரணத்தையே.

ஜீவ விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்திருந்தால் ஆதாம் மரணத்தைக் காணாமல் என்றென்றும் வாழ்ந்திருக்கலாம்.  மாறாக¸ ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆவி¸ ஆத்துமா¸ சரீரம்:

ஆதாமை தேவன் உண்டாக்கினபொழுது அவனுக்குள் ஆவி¸ ஆத்துமா¸ சரீரம் என்று மூன்று ஆள்தத்துவங்கள் காணப்பட்டது.  ஏனென்றால் அவன் தேவனுடைய சாயலின்படியேயும்¸ தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டவன்.  ஆவி மற்றும் ஆத்துமா இவ்விரண்டும் சரீரத்திற்குள் மறைந்திருக்கின்றன. எனவே¸ அதை உள்ளான மனிதன் என்றழைக்கிறோம்.  வெளிப்புறத்திலுள்ள சரீரம் மாம்சத்தினாலும் இரத்தத்தினாலும் உருவான ஒன்றாயிருக்கிறது.

சரீரமாகிய வெளிப்புற மனிதன் ஆவியையும்¸ ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஒரு கூடாரம் போலக் காணப்படுகிறான். மனிதன் கீழ்ப்படியாமையினாலே மரணத்தை ஏற்றுக்கொண்ட உடனே¸ உள்ளான மனிதனில்தான் உடனடியான மரணம் நேரிட்டது.  சரீர மரணம் ஏற்பட நாட்கள் சென்றது.  இதை ஆதியாகமம் 5-ஆம் அதிகாரம் 4¸ 5 வசனங்களில் காணலாம்:

“ஆதாம் சேத்தைப் பெற்றபின்¸ எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து¸ குமாரரையும் குமாரத்தி களையும் பெற்றான்.  ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்;  அவன் மரித்தான்.”

நன்மை தீமை அறிகிற அறிவு:

நன்மையை மட்டுமே அறிந்தவனாய் உண்டாக்கப்பட்ட மனிதன்¸ நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்தபடியினாலே¸ தீமை இன்னதென்று அறிந்துகொண்டான். நன்மை தீமை இரண்டையும் செய்யக் கற்றுக்கொண்டான்.  நன்மையைவிடத் தீமையையே பற்றிக் கொள்ளுகிறவனாகக் காணப்பட்டான்.

ஆதாம் பாவஞ்செய்த பின்பு¸ ஆதாமிடமும் அவன் சந்ததியிடமும் தேவன் எதிர்பார்த்தது என்னவென்றால்: நன்மை தீமை அறியத்தக்க அறிவுடைய மனிதன் தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே.  ஆனால்¸ மனிதன் நன்மையைவிட தீமையையே தெரிந்துகொள்ளுகிறவனாயிருந்தான்.  ஆதாமின் குமாரனாகிய காயீனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம்.  ஆதியாகமம் 4-ஆம் அதிகாரம் 6¸ 7 வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோம்:

“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?  உன் முகநாடி ஏன் வேறுபட்டது?  நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?  நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்…”

காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பாகவே தேவன் இந்த வார்த்தைகளை அவனோடு பேசியிருந்தார். ஆனால்¸ அவனோ நன்மை செய்வதை விட்டுவிட்டு கொலை என்கிற தீமையைத் தெரிந்துகொண்டான்.  தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்ய சமயம் தேடினான்.  அவன் வயல்வெளியில் தனித்திருக்கும் சமயத்தில் அவனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலைசெய்தான் (ஆதியாகமம் 4:8).

அதுமட்டுமல்ல¸ “ஆபேல் எங்கே?” என்று தேவன் கேட்டபொழுது¸ அவன் எங்கேயென்று எனக்குத் தெரியாது; நான் அவனுக்குக் காவலாளியோ? (ஆதியாகமம் 4:9) என்று கேட்டான்.  தன் சகோதரனைக் காத்து அவனுக்கு நன்மை செய்யவேண்டிய காயீன் அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனுக்குத் தீமைசெய்தான்.  ஆகவே¸ தேவனிடத்திலிருந்து சாபத்தைப் பெற்றுக்கொண்டான்.

Saturday, 14 November 2020

பக்தியுள்ள முதல் குடும்பம்!

அத்தியாயம் 2 

(தேவபக்தியுள்ள சந்ததி!)

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும்  காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.  பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார்.  அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார்.  அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார்.  அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார்.  அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார்.  அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம்.  ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான்.  அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார்.  அவள்தான் ஏவாள்.  அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள்.  அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர்.  ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர்.  தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான்.  தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான்.  அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.


ஸ்திரீயின் வித்து:

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்¸ நீ உன் வயிற்றினால் நகர்ந்து¸ உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 

உனக்கும் ஸ்திரீக்கும்¸ உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்¸ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” (ஆதியாகமம் 3: 14¸15)

பக்தியுள்ள குடும்பத்தை (ஆதாம் - ஏவாள்) பாவத்திலே விழத்தள்ளி தேவனுடைய திட்டத்தைக் குலைத்துப்போட சாத்தான் முயன்றான். ஆனால்¸ நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர்.  பாவத்தினால் நுழைந்த அவபக்தியை நீக்குவதற்காகத் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.  அதுதான் “ஸ்திரீயின் வித்து.

மனிதனை உண்டாக்கின தேவன்¸ தானே ஒரு மனிதனாகக் கன்னியின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து¸ மனிதனின் மீறுதலினால் வந்த பாவத்தைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ மனிதனுக்குப் பாவமன்னிப்பையும்¸ பரிசுத்தத்தையும்¸ மெய்யான தேவபக்தியையும் கொடுப்பதே அத்திட்டம்.

பாவஞ்செய்த பின்னர்¸ தேவன் ஆதாமையும்¸ அவன் மனைவியாகிய ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.  ஏனென்றால் நன்மை¸ தீமை அறியத்தக்க கனியைப் புசித்து சாவை ஏற்றுக்கொண்ட மனிதன் அந்தத் தோட்டத்தின் நடுவிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்துப் புசித்து என்றென்றும் தீமை செய்கிறவனாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும்¸ தேவனுடைய சமூகத்திலிருந்து (பிரசன்னத்திலிருந்து) அவர்கள் முழுவதுமாகத் தள்ளப்படவில்லை.  ஆனாலும்¸ பாவத்தினிமித்தம் முன்புபோல் தேவனோடு அவர்களால் உறவாட முடியவில்லை.  தேவனை விட்டு சற்றே தூரமாய்ப் போய்விட்டார்கள்.  பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினையை உண்டுபண்ணிற்று.  ஆகவே¸ பக்தி குறையத்தொடங்கியது.


காயீன்¸ ஆபேல்:

“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்;  அவள் கர்ப்பவதியாகி¸ காயீனைப் பெற்று¸ கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்¸ காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.”  (ஆதியாகமம் 4: 1¸2)

பாவத்தின் விளைவினால் ஆசீர்வாதத்தையும்¸ தேவனோடு உள்ள நித்திய உறவையும் இழந்த மனிதனாய் ஆதாம் தன் குடும்ப வாழ்வை இந்தப் பூமியிலே தொடர ஆரம்பித்தான்.  ஆதாமுக்குக் குமாரர்கள் பிறந்தார்கள்.  அவர்கள் பெயர் காயீன்¸ ஆபேல் என்பன.  காயீன் மூத்தவன்¸ ஆபேல் இளையவன். காயீனுக்குள் அவபக்தி காணப்பட்டது. ஆனால்¸ ஆபேலோ தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தேவனுக்கு நன்றிக் காணிக்கை படைக்க வந்தார்கள்.  தேவன் ஆபேலையும்¸ அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார்.  ஆனால் காயீனை அவர் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால் அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இருக்கவில்லை.

தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை காயீன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் ஏற்பட்டது.  அவன் தன் தம்பியாகிய ஆபேலைப் பகைத்தான்.  பின்பு ஒருநாள் அவர்கள் இருவரும் தனித்திருக்கையில்¸ காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான்.

Richard Baxter Born to Preach and Write

WHEN RICHARD BAXTER WAS BORN in Shropshire, England, on 12 November 1615, the state of religion in England was low.  In Baxter’s birth-town Eaton-Constantine, the gospel was poorly read and seldom preached.  He would set a different standard when he became a pastor. 

But at first that seemed far off.  As a youth he was a liar and a thief consumed with pride, frivolity, and disobedience.  His father had become a Christian through reading the Bible and led a more godly life than most of the pastors for miles around. He tried to guide his son to do the same. 

Baxter's early schooling, however, proved not to be the best way to lead him to Christ.  His schoolmasters were ministers who “read Common Prayer on Sundays and Holy Days, and taught school and tippled (drank) on the week-days, and whipped the boys, when they were drunk.”  However, when Baxter was about fifteen, someone loaned his father Bunny’s Resolution, a serious call to Christian living which Baxter read.  He came under the conviction of sin, began to pray, read other Christian books, and changed direction. He studied to become a pastor. About that time he also started coughing up blood, an indication of tuberculosis. 

In 1641 Baxter became a pastor at Kidderminster.  He preached God’s Word and took care to visit each person in the town and speak to them about their sin.  The transformation of the place was astounding.  Bible reading, praise, and prayer replaced cursing, sexual immorality, and drunkenness.  The church had to be enlarged five times. 

He wrote The Reformed Pastor, explaining his methods to others.  In a typical sermon he said, “It is a thousand pities that when God has provided a savior for the world, and when Christ has suffered so much for their sins...that yet so many millions should everlastingly perish because they made light of their savior and salvation and prefer the vain world and their lusts before them.” 

During the seventeenth century, King and Parliament went to war with each other.  Kidderminster was in a Royalist county, so Baxter, who sympathized with the Puritans, was driven out.  He became chaplain to parliamentary (Puritan) soldiers.  However, he did not get on well with Oliver Cromwell, the leader of the Puritans. 

Baxter was persecuted by both sides in the religious and political quarrels of the day and went to prison several times.  Nonetheless, his one hundred and twenty eight books had a strong influence on the nation. The best-known of these was The Saints’ Everlasting RestIt held out the hope of eternal life as a strong motivation for Christian living. 

Keep “heaven in your eye at all times,” he said.  Another book, Call to the Unconverted, exhorted readers to turn from sin to a holy life.  Its success led him to write a series of books designed to bring people to repentance and to set themselves apart for God’s use. 

He and his younger wife practiced what they preached, always helping others even though they were very poor themselves. In their last imprisonment together, Baxter’s wife shared a cell with him and died first.  His own death came in 1691.

Dan Graves

Sunday, 1 November 2020

News Update from Every Home for Christ

Today is the International Day of Prayer for Persecuted Christians.

Every day, our teams do outreach in dangerous nations. They risk attack, arrest, and even death for the sake of the gospel. It can be hard for us to picture what life is like for believers in these contexts, so we asked some of our leaders in these nations to share.

From the Middle East:

"One brother who partners with us was wrongly jailed on a false charge for about 10 months... He was targeted because of his testimony for the Lord, but was arrested on a false and unrelated charge… It was only after he changed his lawyer that he was released from prison. He was never found guilty of any crime."

From North Africa:

"A man, for his faith in Christ, was stoned to death after being locked up and starved for 40 days without food... More recently, a young boy who believed in Christ was sentenced to death by hanging by Sharia court."

From North Africa:

"One new believer is experiencing persecution for her faith... Her parents prevent her from having contact with Christians. They often threaten to kill her."

Why would Christians continue to share the gospel in such a threatening environment? They do it because the gospel is the power of God that brings salvation (Romans 1:16). It is the only hope that people have to be rescued from their sins — the only message that points them to Jesus.

Since last year, more than 8 million people have responded to Jesus in nations closed to the gospel.

These people are why our brothers and sisters risk so much to share the message. To them, the gospel is worth the persecution they face. To us, it is worth supporting them.

Tuesday, 27 October 2020

Truth about Bible - The Book!

Amazing Facts about Bible - The Book


👉🏼 Number of Books in the Bible: *66*
👉🏼 Chapters: 1,189
👉🏼 Verses: 31,101
👉🏼 Words: 783,137
👉🏼 Letters: 3,566,480
👉🏼 Number of Promises given in the Bible: 1,260
👉🏼 Commands: 6,468
👉🏼 Predictions: over 8,000
👉🏼 Fulfilled Prophecy: 3,268 verses
👉🏼 Unfulfilled Prophecy: 3,140
👉🏼 Number of Questions: 3,294
👉🏼Longest Name: Mahershalalhashbaz (Isaiah 8:1)
👉🏼 Longest Verse: Esther 8:9 (78 words)
👉🏼 Shortest Verse: John 11:35 (2 words: "Jesus wept" .
👉🏼 Middle Books: Micah and Nahum
👉🏼 Middle Chapter: Psalm 117
👉🏼 Shortest Chapter (by number of words): Psalm 117 (by number of words)
👉🏼 Longest Book: Psalms (150 Chapters)
👉🏼 Shortest Book (by number of words): 3 John
👉🏼 Longest Chapter: Psalm 119 (176 verses)
👉🏼 Number of times the word *"God"* appears: 3,358
👉🏼 Number of times the word *"Lord"* appears: 7,736
👉🏼 Number of different authors: 40
👉🏼 Number of languages the Bible has been translated into: over 1,200

OLD TESTAMENT STATISTICS

👉🏼 Number of Books: 39
👉🏼 Chapters: 929
👉🏼 Verses: 23,114
👉🏼 Words: 602,585
👉🏼 Letters: 2,278,100
👉🏼 Middle Book: Proverbs
👉🏼 Middle Chapter: Job 20
👉🏼 Middle Verses: 2 Chronicles 20:17,18
👉🏼 Smallest Book: Obadiah
👉🏼 Shortest Verse: 1 Chronicles 1:25
👉🏼 Longest Verse: Esther 8:9 (78 words)
👉🏼 Longest Chapter: Psalms 119

NEW TESTAMENT STATISTICS

👉🏼 Number of Books: 27
👉🏼 Number of Chapters: 260
👉🏼 Number of Verses: 7,957
👉🏼 Words: 180,552
👉🏼 Letters: 838,380
👉🏼 Middle Book: 2 Thessalonians
👉🏼 Middle Chapters: Romans 8, 9
👉🏼 Middle Verse: Acts 27:17
👉🏼 Smallest Book: 3 John
👉🏼 Shortest Verse: John 11:35
👉🏼 Longest Verse: Revelation 20:4 (68 words)
👉🏼Longest Chapter: Luke 1

There are 8,674 different Hebrew words in the Bible, 5,624 different
Greek words, and 12,143 different English words in the King James Version.

Bible was Written by Approximately 40 Authors

• Written over a period of 1,600 years
• Written over 40 generations
• Written in three languages: Hebrew, Greek and Aramaic
• Written on three continents: Europe, Asia and Africa
• Written in different locations: wilderness, dungeon, palace, prison, in exile, at home
• Written by men from all occupations: kings, peasants, doctors, fishermen, tax collectors, scholars, etc.
• Written in different times: war, peace, poverty, prosperity, freedom and slavery
• Written in different moods: heights of joy to the depths of despair
• Written in harmonious agreement on a widely diverse range of subjects and doctrines.

10 Longest Books in the Bible

1) Psalm - 150 Chapters, 2,461 verses, 43,743 words
2) Jeremiah - 52 chapters, 1,364 verses, 42,659 words
3) Ezekiel - 48 chapters, 1,273 verses, 39,407 words
4) Genesis - 50 chapters, 1,533 verses, 38,267 words
5) Isaiah - 66 chapters, 1,292 verses, 37,044 words
6) Numbers - 36 chapters, 1,288 verses, 32,902 words
7) Exodus - 40 chapters, 1,213 verses, 32.602 words
8) Deuteronomy - 34 chapters, 959 verses, 28,461 words
9) 2 Chronicles - 36 chapters, 822 verses, 26,074 words
10) Luke - 24 chapters, 1,151 verses, 25,944 words

10 Shortest Books in the Bible

1) 3 John - 1 chapter, 14 verses, 299 words
2) 2 John - 1 chapter, 13 verses, 303 words
3) Philemon - 1 chapter,bb 25 verses, 445 words
4) Jude - 1 chapter, 25 verses, 613 words
5) Obadiah - 1 chapter, 21 verses, 670 words
6) Titus - 3 chapters, 46 verses, 921 words
7) 2 Thessalonians - 3 chapters, 47 verses, 1,042 words
8) Haggai - 2 chapters, 38 verses, 1,131 words
9) Nahum - 3 chapters, 47 verses, 1,285 words
10) Jonah - 4 chapters, 48 verses, 1,321.

Sunday, 18 October 2020

Multiple Choice Questions from Psalms - Chapters 1 to 15

QUIZ on PSALMS (Chapters 1 to 15) 

PSALMS 1

Q1.  சங்கீதம் முதல் அதிகாரத்தில், 
கடைசி வசனம் எழுதுக. (3 Marks)

PSALMS 2

Q2.  நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய _______________ மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணிவைத்தேன்.

a) மோரியா        
b) எர்மோன்     
c) சீயோன்        
d) கர்மேல்

Q3.  _______________ல் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.

a) எருசலேமில்              
b) ஆலயத்தில்        
c) தண்ணீரின் மேல்  
d) பரலோகத்தில்

Q4.  _______________ஆல் அவர்களை
நொறுக்கி¸ குயக்கலத்தைப்போல்
அவர்களை உடைத்துப்போடுவீர். 

a) கோபத்தால்       
b) இருப்புக்கோலால்        
c) உக்கிரத்தால்        
d) பட்டயத்தால்

PSALMS 3

Q5.  தாவீதுக்கு விரோதமாய்
சுற்றிலும் படையெடுத்து வந்தவர்கள்
எத்தனை பேர்?  

a) பதினாயிரம் பேர்
b) இருபதாயிரம் பேர்
c) நாற்பதாயிரம் பேர்
d) அநேகம் பேர்

Q6.  தாவீதுக்கு விரோதமாய்
எழும்பினவர்கள் எத்தனை பேர்?  

1) ஆயிரம் பேர்
2) பதினாயிரம் பேர்
3) முப்பதாயிரம் பேர்
4) அநேகம் பேர்

Q7.  தேவனுடைய ஆசீர்வாதம் 
யாரின் மீது இருப்பதாக
தாவீதுராஜா கூறுகிறார்?

a) ஜாதிகள் மேல்
b) சிருஷ்டிப்பின் மேல்
c) ஜனத்தின் மேல்
d) தூதர்கள் மேல்

PSALMS 4

Q8.  ________________ என்று இந்த
சங்கீதம் தொடங்குகிறது.

a) கர்த்தாவே
b) என் நீதியின் தேவனே
c) என் ஆண்டவரே 
d) என் தேவனே

Q9.  உங்கள் இருதயத்தில் இதைச்
செய்துகொண்டு அமர்ந்திருங்கள்.

a) சிந்திந்துக்கொண்டு
b) புலம்பிக்கொண்டு
c) பேசிக்கொண்டு 
d) துதித்துக்கொண்டு

Q10.  கர்த்தாவே¸ நீர் ஒருவரே என்னை
இவ்வாறாகத் தங்கப்பண்ணுகிறீர்.

a) சுகமாய்
b) சமாதானமாய்
c) சந்தோஷமாய் 
d) செழிப்பாய்

PSALMS 5

Q11.  சங்கீதம் 5:7 எழுதுக.  (2 Marks)

PSALMS 6

Q12.  கர்த்தாவே, உம்முடைய _______________லே
என்னைக் கடிந்துகொள்ளாதேயும்;
உம்முடைய _______________லே என்னைத்
தண்டியாதேயும். 

a) உக்கிரத்திலே; கோபத்திலே       

b) கோபத்திலே; உக்கிரத்திலே        

Q13.  _______________ல் உம்மைத் 
துதிப்பவன் யார்? 

a) சஞ்சலத்தில்        
b) மரணத்தில்        
c) பாடுகளின் மத்தியில்        
d) பாதாளத்தில்

Q14.  என்னைக் குணமாக்கும்
கர்த்தாவே¸ என் _______________
நடுங்குகின்றன. 

a) எலும்புகள்
b) பற்கள்
c) சொற்கள்
d) முழு சரீரமும்

Q15.  கர்த்தர் என் _____________
சத்தத்தைக் கேட்டார்.

a) விண்ணப்பத்தின்
b) அழுகையின்
c) ஜெபத்தின் 
d) கதறுதலின்

PSALMS 7

Q16.  சத்துரு எந்த மிருகத்தைப்போல்
தன் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டு
போகிறதாகத் தாவீது கூறுகிறார்?

a) புலி
b) சிங்கம்
c) கரடி
d) யானை 

Q17.  துன்மார்க்கர் மனந்திரும்பாவிட்டால்
கர்த்தர் அவனுக்கு விரோதமாக
என்ன பண்ணுவார்?

a) சினங்கொள்ளுவார்
b) எதிரிகளை எழுப்புவார்
c) கொரோனாவை அனுப்புவார்
d) பட்டயத்தை கருக்காக்குவார் 

Q18.  தாவீது ராஜா தான் எதன்படி 
கர்த்தரைத் துதிப்பதாகக் கூறுகிறார்?

a) நாமத்தின்படி
b) நீதியின்படி
c) கிரியையின்படி 
d) நம்பிக்கையின்படி

 

PSALMS 8

Q19.  சங்கீதம் 8-ல் 2-ஆம் வசனம்
எழுதுக. (2 Marks)


PSALMS 9

Q20.  யாருக்குக் கர்த்தர் அடைக்கல
மானவர்?

a) நெருக்கப்பட்டவனுக்கு
b) எளிமையானவனுக்கு
c) துன்பப்பட்டவனுக்கு 
d) சிறுமையானவனுக்கு

Q21.  கர்த்தர் யாரைக் கைவிடுகிற
தில்லை?

a) நம்புகிறவர்களை
b) தேடுகிறவர்களை
c) துதிப்பவர்களை 
d) காத்திருப்பவர்களை

Q22.  யார் என்றைக்கும் மறக்கப்படுவ
தில்லை?

a) சிறுமையானவன்
b) எளியவன்
c) ஏழையானவன் 
d) பரதேசியானவன்

PSALMS 10

Q23.  துன்மார்க்கருடைய கண்கள்
யாரைப் பிடிக்க நோக்கிக்
கொண்டிருக்கின்றன?

a) திக்கற்றவர்கள்
b) நீதிமான்கள்
c) பலவான்கள்
d) ஏழைகள்

Q24.  கர்த்தருடைய தேசத்திலிருந்து
யார் அழிந்துபோவார்கள்? 

a) பாவிகள்
b) புறஜாதியார்
c) துன்மார்க்கர்
d) மதிகெட்டவர்கள்

Q25.  தேவன் யாருக்கு நீதிசெய்ய
தம்முடைய செவிகளை சாய்த்துக்
கேட்பார்?

a) நீதிமானுக்கு
b) ஏழைகளுக்கு
c) விதவைகளுக்கு
d) திக்கற்ற பிள்ளைகள் மற்றும்
    ஒடுக்கப்பட்டவர்கள்

PSALMS 11

Q26.  சங்கீதம் 11-ல் உங்களுக்குப்
பிடித்த வசனத்தைப்
பிழையில்லாமல் எழுதுக.  (3 Marks)

PSALMS 12

Q27.  சங்கீதம் 12-ல் எத்தனை
வசனங்கள் உள்ளன?

a) 6
b) 7
c) 8
d) 11

Q28.  கர்த்தருடைய சொற்கள் மண்
உலையில் எத்தனை தரம் உருக்கி¸
புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பா
யிருக்கிறது?

a) 4
b) 6
c) 7
d) 9

Q29.  உண்மையுள்ளவர்கள்
மனுபுத்திரரில் ________________.

a) இல்லை
b) குறைவு
c) அதிகம் 
d) மிகவும் அதிகம்


PSALMS 13

Q30.  நான் உம்முடைய _______________ன்
மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். 

a) காருணியத்தின்
b) கிருபையின்
c) இரட்சிப்பின்
d) நீதியின்

Q31.  கர்த்தர் எனக்கு நன்மை செய்த
படியால் அவரை _______________. 

a) புகழுவேன்
b) பாடுவேன்
c) போற்றுவேன்
d) பணிந்துகொள்வேன்

Q32.  உம்முடைய _______________ல் என்
இருதயம் களிகூரும். 

a) சத்தியத்தினால்
b) இரட்சிப்பினால்
c) கிருபையினால்
d) தயவினால்

PSALMS 14

Q33.  சங்கீதம் 14:7-ஐ அடிபிறழாமல்
எழுதுக. (3 Marks)

PSALMS 15

Q34.  கர்த்தாவே¸ யார் உம்முடைய 
_______________ல் தங்குவான்?  யார்
உம்முடைய  _______________ல்
வாசம்பண்ணுவான்? 

a) கூடாரத்தில்; பரிசுத்த பர்வதத்தில்

b) பரிசுத்த பர்வதத்தில்; கூடாரத்தில்


Q35.  _______________ நடந்து¸ நீதியை
நடப்பித்து¸ மனதாரச் சத்தியத்தைப்
பேசுகிறவன்தானே. 

a) நீதிமானாய்
b) கர்த்தருக்குப் பயந்து
c) உத்தமனாய்
d) குற்றமில்லாதவனாய்

Wednesday, 16 September 2020

MARIA WOODWORTH ETTER, PIONEER WOMAN PREACHER

19th Century Woman Evangelist: MARIA WOODWORTH ETTER

[Maria Woodworth-Etter from her autobiography.]

IN THE PREFACE to her autobiography, Maria Woodworth-Etter wrote:

My object in putting this little work before the public is to show to its readers that it is useless to fight against God, but that they should lead sinners to the cross and to repentance, and induce those whom God has called to stand upon the walls of Zion to proclaim his truths to a dying world, and not to put off doing what God designs them to do because they feel weak and unworthy, but to trust him and go forward in the discharge of duty.

Converted at thirteen and filled with the Holy Spirit, she nonetheless admitted she resisted God’s call for many years.“Soon after I was converted I heard the voice of Jesus calling me to go out in highways and hedges, and gather in the lost sheep of the house of lsrael.” Scared to preach the gospel because she was a woman and a teenager, and unable to face probable ridicule, she instead married Philo Horace Woodworth. He proved to be an unstable and unfaithful husband with frequent mood swings: “At times he was on the mountain-top, and then again he would be down in the valley in his religious experience.”

They had five children together but four of them died young, which she attributed to her disobedience to God’s call. Finally when she was thirty-five, she ventured to preach in public. She began by speaking a little in a Quaker assembly where such behavior was normal. But her husband and remaining daughter resisted and her own fears held her back. However, she saw visions in which Christ commanded her and promised to be with her:

As I continued to read my Bible I saw that in all ages of the world the Lord raised up of his own choosing, men, women, and children—Miriam, Deborah, Hannah, Hulda, Anna, Phoebe, Narcissus, Tryphena, Persis, Julia, and the Marys, and the sisters who were co-workers with Paul in the gospel, whose names were in the Book of Life, and many other women whose labors are mentioned with praise.

She became afraid of hiding away her “one talent.” Her first public efforts were with people she had lived among, which was hard for her because they knew her with all her faults. Yet she found strength.

Over time, she gained courage and her efforts were crowned with enough success that nearby churches requested her as their pastor. She refused, for she felt her work must be as an itinerant evangelist. Gradually her crowds grew larger so that her tent, which held eight thousand people, was too small. Philo impeded her efforts by exploiting the crowds to sell refreshments. In 1891 she divorced him for repeated instances of infidelity. (He immediately married a sixteen-year-old girl but died the following year.)

Meanwhile, Maria searched the Scriptures to see what they had to say about women preaching. She took to heart the prophecy of Joel which predicted that in the latter days “Your sons and your daughters shall prophesy.” Her position that this was meant for the church was reinforced by testimony from the Acts of the Apostles that Philip’s four daughters had prophesied. 

Her revival services became famed for the trances she experienced while under the power of the Spirit. Sinners would also fall into trances under conviction of sin. Thousands of people crowded her tent and many were saved.

In 1902 she married Samuel Etter who was fully supportive of her ministry. Shortly afterward she began to preach healing as well as repentance and experienced success in that ministry, too. 

On this day 16 September 1924 Maria Buelah Woodworth-Etter died. With her emphases on the role of the Holy Spirit, on women’s roles in evangelism, and on healing, she is regarded as a precursor of Pentecostal evangelism.

Saturday, 29 August 2020

பக்தியுள்ள ஓர் சந்ததி!

 தேவபக்தியுள்ள சந்ததி!

(அத்தியாயம் 1)

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே¸ பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ...” (மல்கியா 2:15)

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27)


ஆதியிலே தேவன் மனிதனைப் படைத்தபொழுது அவனைத் தன் சாயலின்படியேயும்¸ தன் ரூபத்தின்படியேயும் படைத்தார். அவனை மண்ணினாலே வனைந்து அவனுக்குள் தம் சுவாசத்தை ஊதினார். அப்பொழுது அவனுக்குள் ஜீவன் (ஆவியும்¸ ஆத்துமாவும்) வந்தது. அவன் ஜீவ ஆத்துமாவானான். அப்படி முதன் முதலில் உண்டாக்கப்பட்ட மனிதன்தான் ஆதாம்!

ஆதியிலே தேவனால் உண்டாக்கப்பட்டது ஒரே ஒரு மனிதன்தான். அநேகரல்ல. ஏனென்று தெரியுமா? ஏனென்றால்¸ அந்த ஒருவன் மூலமாய் பக்தியுள்ள சந்ததி இந்த உலகத்தில் தோன்றவேண்டுமென்பதற்காகத்தான்.

தேவன் ஆதாம் என்கிற ஒரு மனிதனுக்குப் பதிலாகப் பலரை உண்டுபண்ணியிருப்பாரென்றால்¸ பக்தியுள்ள ஜனக் கூட்டம் (வம்சம்) இந்த உலகத்தில் தோன்றியிருக்க முடியாது. அதற்கு மாறாக மனிதர்களுக்குள் அவபக்தியும்¸ அவ மரியாதையும்தான் காணப்பட்டிருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் தன் மன விருப்பத்தின் படியேயும்¸ யோசனையின்படியேயும் நடந்திருப்பான். சமுதாயத்தில் ஒழுங்கு காணப்பட்டிருக்க முடியாது.

பக்தி என்றால் என்ன?

பக்தி என்பது மனிதன் தன்னை உண்டாக்கின தேவனிடத்தில் (சிருஷ்டிகரிடத்தில்) கொண்டிருக்கும் உறவைக் குறிக்கிறது. பக்தியுள்ள மனிதன் கீழ்க்காணும் குணாதிசயங்கள் உடையவனாயிருப்பான்:

1. தேவன் ஒருவர் உண்டென்று நம்புவான். அதாவது¸ தான் இயற்கையாக இந்த உலகத்தில் தோன்றிவிடவில்லை என்றும்¸ தன்னை உண்டாக்கின தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும் நம்புவான்.

2. தேவனோடு தினந்தோறும் உறவுகொள்ள விரும்புவான். அவருடைய சமூகத்தை (பிரசன்னத்தை) நித்தமும் தேடுவான்; அவரும் தன்னோடுகூட இருக்கவேண்டும் என்று வாஞ்சிப்பான்.

3. தேவனுக்குப் பிரியமான காரியங்களையே செய்ய நாடுவான். அவருக்குரிய கனத்தையும்¸ மரியாதையையும் அவருக்குக் கொடுப்பான்; அவரைத் தொழுதுகொள்ளவும் (நமஸ்கரிக்கவும்)¸ சேவிக்கவும் செய்வான்.

ஒருநாள் திருடன் ஒருவன் இரவு நேரத்தில் திருடு வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரரோ பக்தி நிறைந்தவர். அவர் கடவுள்மேல் நம்பிக்கை வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த திருடன் நேராக பீரோ உள்ள அறைக்குள் நுழைந்தான். பீரோவைத் திறந்து பணம் மற்றும் நகைகளை ஒரு மூட்டையில் கட்டினான்.

தன்னால் முடித்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு போகும் தருவாயில்¸ திடீரென அவனுக்கு வழக்கம்போல வரும் வயிற்று வலி வந்துவிட்டது. அந்த வயிற்று வலியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செய்வதறியாது திகைத்தான்.

வயிற்று வலியால் துடி துடித்துக்கொண்டிருந்த அவன் அந்தச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தைப் பார்த்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது¸ “ஏன் இயேசுகிறிஸ்துவை ஒருமுறை கூப்பிட்டுப்பார்க்கக் கூடாது?” என்று. உடனே இயேசுவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டான்: “இயேசுவே¸ என்னை மன்னியும். இந்த வயிற்று வலியிலிருந்து எனக்குச் சுகம் தாரும்; நான் இனித் திருடமாட்டேன்” என்று சொல்லித் தன் தவற்றை ஒப்புக்கொண்டான்.

உடனே அந்த வயிற்று வலி அவனை விட்டு நீங்கிற்று. தான் திருடிய எல்லாப் பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டுத் திரும்பிப் போனான். சந்தோஷமும்¸ சமாதானமும் அவனுக்குக் கிடைத்தது. என்னே பாக்கியம்

ஆம்¸ அந்தக் கள்ளனுக்குள் காணப்பட்டது ஒருவிதமான பக்தி. அதினால் அவனுக்குக் கிடைத்தது பாவமன்னிப்பும்¸ சரீர சுகமும்! இன்று நம்முடைய பக்தி எப்படிப்பட்டதாயிருக்கிறது என்று நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமா?

பக்தியுள்ள முதல் குடும்பம்!

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார். அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார். அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார். அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார். அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம். ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான். அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார். அவள்தான் ஏவாள். அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள். அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர். ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர். தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான். தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான். அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.

Friday, 28 August 2020

சங்கீதம் 39!

எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்!

1. என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து¸ துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

2. நான் மவுனமாகி¸ ஊமையனாயிருந்தேன்¸ நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;

3. என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

4. கர்த்தாவே¸ நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும்¸ என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

5. இதோ¸ என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது¸ எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

6. வேஷமாகவே மனுஷன் திரிகிறான்@ விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான்¸ யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

7. இப்போதும் ஆண்டவரே¸ நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.

8. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்¸ மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.

9. நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

10. என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

11. அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது¸ அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.)

12. கர்த்தாவே¸ என் ஜெபத்தைக்கேட்டு¸ என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

13. நான் இனி இராமற்போகுமுன்னே¸ தேறுதலடையும்படி  என்னிடத்தில் பொறுமையாயிரும்.

Thursday, 27 August 2020

From Hindu to Christian: The Testimony of Ganga Narayan Sil

The Conversion and Service of GANGA NARAYAN SIL to Christianity

[Calcutta street in the 19th century, from Wikimedia]

GANGA NARAYAN SIL was born a Hindu but died a Christian.  His path to conversion was slow and convoluted. But when he finally encountered the living Christ, he became a passionate soul-winner.

Sil’s first contact with Christianity was through the Chitpore mission school at Calcutta.  He attended there two years before the school’s religious instruction sank into his mind.  Then he recognized his guilt before his Creator and his need of a savior.  Examining Hindu teachings, he decided they were insufficient for his need.  He also examined Islam and found it unsatisfying.  

Convinced that Christianity has the truth, he attempted to live by its precepts and published an article contrasting it with Hinduism.  This brought reproach upon him from his family and other Indians.  About this time he came across infidel writings that cast doubt on the divinity of Christ and other Christian doctrines.  He scrapped all faith and plunged into sin. He went further and tried to refute Christianity, but found he could not.

Scripture warnings came to his mind, especially “Whoever remains stiff-necked after many rebukes will suddenly be destroyed—without remedy,” and he found himself uneasily contemplating eternity.  At that point he read Philip Doddridge’s "Rise and Progress of Religion in the Soul" and it deeply affected him. Still he resisted conversion. 

What finally set him back on the road to embracing Christianity was the observation that several great scientists and philosophers, such as Sir Isaac Newton and Francis Bacon, had found Christianity worthy of consideration.  He had also read of the death bed terrors of infidels such as Voltaire and Thomas Paine, and saw that their defiance of biblical truths did not end well.

Salvation and Service of Narayan Sil:

Returning to study of the Bible, he opened his heart to Christ.  On 27th August 1837, Ganga Narayan Sil was baptized at the Baptist mission in Calcutta.  Thereafter he was a close student of Scripture and went out several times a week to preach in the Bengali language at local chapels, in parks, and on the streets.  Because of his intellect, humility, and patience, many Indians sought him out for advice on their religious questions.

Sil’s ministry lasted not quite seven years after his baptism because he died of cholera after a short illness in August 1843.  He was just twenty-seven years old.  While he was dying, his mother entreated him to call on his childhood gods but he clung to Christ alone as his righteousness.

Tuesday, 28 April 2020

Does life feel out of control? Just Wait on God!

Does life feel out of control?

(Mail Received from YouVersion Bible App)

400 years. That’s how long the Israelites waited for God to deliver them from slavery. But after they left Egypt, God didn’t take them directly to their promised land.


Instead, they camped out at the base of a mountain while God instructed Moses. During that time, God’s glory rested on the mountain.

But after 40 days, the Israelites grew frustrated by the delay…so they rejected God and pursued whatever pleased them.

If you’ve ever felt frustrated by an uncertain season that lasts longer than you anticipated, you’re not alone.

Waiting can lead to disappointment and frustration. In those moments, we can become so focused on our circumstances that we forget God is still in control. If God’s in control, we might ask, then where is He? Why hasn’t anything changed?

Here are three truths to remember:

  1. Waiting reveals what you worship

    When the Israelites’ plans were delayed, they pursued instant gratification because that’s what they actually valued.

    When you find yourself dissatisfied with your situation, what do you turn to? What you focus on reveals what you value, and what you value determines what you worship.

  1. Waiting is never wasted

    God wasn’t withholding His promise from the Israelites—He was preparing them for it.

    God’s timeline is different than ours, but your waiting might actually be preparing you for the plans and purposes God has for you.

  1. Waiting helps us focus on God’s faithfulness

    God’s faithfulness hasn’t changed. The God who patiently protected and provided for the Israelites also conquered death so that you could experience eternal life.

    If you find yourself growing weary from waiting, look up and look back. Look for evidence of God’s presence, and look back on what He’s done for you. This will help you hold onto hope.

Hoping in God is never wasted because the One who conquered death is still in control, and He’s always at work in your waiting.